மஹிந்த உதய விஞ்ஞான ஆய்வுகூடம் 2012 ஆம் ஆண்டு ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மைந்த உதய விஞ்ஞானக்கூடங்கள் ஆயிரம் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்றது.
இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் கணினி கல்வி நெறியை கற்க இலகுவாக இருந்து வருகின்றது பெருந்தோட்டங்களில் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளும் இதில் பயன் பெற்று வந்தனர்.
பல கோடி ரூபாய் 65 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கணினிகளுடன் இந்த வேலை திட்டம் ஆரம்பித்த போதிலும் கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட வளையக்கல்விக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் பாடசாலையில் கட்டப்பட்டிருக்கும் மஹிந்த உதய விஞ்ஞான கூடம் மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருக்கும் நிலையில் விஞ்ஞான கூடம் காடுமன்றி பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றன.
பெருந்தோட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் கணினி கல்வியை கற்க முடியாத நிலையில் பாடசாலைகளுக்கு கொடுக்கப்பட்ட இவ்வாறு மஹிந்த உதய விஞ்ஞான ஆய்வுக்கூடம் மூடப்பட்டிருக்க நிலையில் இந்தப் பாடசாலை மாணவர்கள் கணினி கல்வியை கற்க முடியாத நிலையை பல வருடங்களாக நீடித்து வருகின்றனர்.
பெருந்தோட்ட துறையைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களின் பிள்ளைகளே இந்த பாடசாலைக்கு அதிகமாக கல்வி கற்க வருகின்றனர்.
கணினியை கண்டிலாத மாணவர்கள் கூட இந்தப் பாடசாலை கல்வி கற்று வருகின்றனர் பல பாடசாலைகள் பல்வேறு வசதிகள் இன்றி கணினி வசதிகளும் இன்றி கணினி கல்விக்காக பாடசாலை மாணவர்கள் ஏங்கும் இந்த நிலையில் இந்தப் பாடசாலையில் அருமையாக பூர்த்தி செய்யப்பட்ட கணினி விஞ்ஞான ஆய்வு கூடம் உண்டு கிடைத்த போதிலும் மாணவர்களுக்கு பாவிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றரை வருடங்களாக இந்த மஹிந்த உதய விஞ்ஞான ஆய்வு கூடம் மூடப்பட்டு இருக்கும் இந்த நிலையில் இந்த விஞ்ஞான ஆய்வு கூடத்தில் 64 கணினி இருந்ததாகவும் அவை தற்போது பழுதடைந்து இருக்கலாம் என பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பலமுறை தெஹியோவிட்ட வளையக்கல்வி பணிமனைக்கும் சப்ரகமுவ மாகாண கல்வி திணை கழகத்திற்கும் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்த போதிலும் இதுவரையும் எந்த பலனும் கிடைக்கவில்லை என பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தெரிவித்தார்.
