கண்டி அலவதுகொட பகுதியில் சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, மின் கம்பங்கள் முறிந்து பாதையில் விழுந்துள்ளது.

இச் சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பாதிப்புக்குள்ளானதுடன் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அக்கிராம மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

