பொகவந்தலாவ – பொகவானை பகுதியிலுள்ள, தேயிலை தோட்டப்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேயிலை தோட்டத்தில், இன்று முற்பகல் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக, டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
