பழைய மஸ்கெலியா சண்முகநாதர் ஆலயத்தில் வரலாற்று சுவடுகளை சேதப்படுத்தும் வகையில் சுவர்களில் கூரிய ஆயுதங்களினால் கிறுக்கப்பட்டிருப்பது தொடர்பில் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதே மஸ்கெலியா பழைய நகர விகாரையிலும் , மஸ்ஜித்திலும் , இவ்வாறான எந்தவொரு கிறுக்கல்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்வாறான செயற்பாடுகளால் நாமே நம்மினத்தை இழிவு படுத்துவதாக அமைகிறது.

200 அல்ல 500 ஆண்டுகள் கடந்தாலும் எம்மில் நல்லெண்ணங்கள் , நற்செயல்கள் தோன்றாத வரை நம் சமூகம் முன்னேறாது.

அன்பானவர்களே இவ் ஆலயம் நூற்றாண்டு கடந்து வரலாற்றில் பதியபட்ட ஆலயம் . மேலும் சில காலங்களில் இலங்கையின் தேசிய மரபுரிமை என்ற பெயரை அடைந்து பாடநூல்களில் கூட வெளிவரலாம்.

ஆகவே இதனை பார்வையிட செல்லும் போதுசேதப்படுத்தாது , கிறுக்கல்களை தவிர்த்து எதிர்கால சந்ததியினரிம் கவனமாக ஒப்படைக்க வேண்டியது எம் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ச.சதீஷ்குமார்
மஸ்கெலியா

