அகில இலங்கை தமிழ் அழகுக்கலை,அழகு சாதனவியல் நிபுணர்கள் சம்மேளனம் மற்றும் சூரியா மகளீர் அபிவிருத்தி பேரவை இணைந்து நடாத்திய 2021,2022 2023 ஆம் ஆண்டுகளுக்கான”சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் “விருதுகள் விழாவில் மலையகத்தின் மஸ்கெலியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நித்யா சதீஷ்குமார் தமக்கான விருதினை சொந்தமாக்கிக் கொண்டார்.

திருமதி நித்தியா சதீஷ்குமார் மஸ்கெலியா சென்ஜோசப் கல்லுரியில் படிப்பை முடித்து, கலை துறையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 2011 ஆம் ஆண்டு கொழும்பில் திருமதி பிரியா சங்கர் அவர்களின் வழிகாட்டலில் அழகுக் கலையை கற்றார்.
தனது அழகுக்கலை டிப்ளமோ கல்வியின் பின் 2018 இல் திரு கண்ணன் ராஜ் மாணிக்கம் அவர்களிடம் Master of Beauty என்ற தலைப்பின் கீழ் கற்று. தொடர்ந்தும் 2019 ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் “ஸ்டியா அழகுக்கலை” (STEA makeup) நிறுவன உரிமையாளர் திருமதி சுகந்தி அவர்களிடம் Master of Bridal எனும் பயிற்சியை முடித்து 2019 இல் இடம் பெற்ற தேசிய விருதுக்கான போட்டியில் தனது திறமையை நிரூபித்து இலங்கை தேசிய விருதை தன் வசப்படுத்தி கொண்டவர்.
மேலும் இலங்கையின் பிரபல அழகுக்கலை நிபுணரான கயல்விழி அவர்களிடம் தன்னை படநெறியால் மெருக்கேற்றிக்கொண்டார். தனது தொழிலில் ஒரு தசாப்தங்களை கடந்து சிகரம் தொட்ட பெண்கள் வரிசையில் இருப்பது மலையகத்திற்கு மற்றுமொரு பெருமையாகும்.
07.05.2023.
