லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் மேமலை வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது.

இதுவரையில் பல ஏக்கர் வனப்பகுதி பாரிய அளவில் தீக்கிரையாகியுள்ளது. தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் இக்காட்டுத்தீ தொடருமானால் மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹதோவ பகுதியில் உள்ள வனப்பகுதியும் தீயினால் நாசமடையக்கூடும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
ராமு தனராஜா

