மஸ்கெலியா கவரவில தோட்ட கோயில் மண்டபத்தில் பண்ணையாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இன்றையதினம் இடம்பெற்றது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் மிருக வைத்தியரின்மையால் பண்ணையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

சுமார் 2500 பசும்பால் உற்பத்தியாளர்களும் 2000 ஆடு, கோழி வளர்ப்பாளர்களும் காணப்படுகின்றனர்.

இப்பிரதேசித்தில் மிருக வைத்தியர் இன்மையால் நாளாந்தம் 15000 லீற்றர் பசும்பால் உற்பத்தி செய்யும் இப்பிரதேசவாசிகள், சுகவீனமுற்ற கால் நடைகளுக்கு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வேறு இடங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாளாந்தம் 15,000 ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையினை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களில் ஒருவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
