மஸ்கெலியா நிருபர்
செ.தி.பெருமாள்.22.05.2023.
நேற்றைய தினம் 21.05.2023. அன்று ஹட்டன் வனத்துறை காரியாலய அதிகாரி ஏற்பாடு செய்த மர கன்றுகள் நாட்டும் நிகழ்வு நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள எபடின் கிராமத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் கிராம மக்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சார்பில் இளைஞர்கள் மற்றும் ஹட்டன் வன காரியாலய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஹட்டன் வன காரியாலய அதிகாரிகளான வி.ஜே.கே.ருக் ஷான், திருமதி.ஹன்சிகா பண்டார,நுவான் பிரியதர்ஷன,நிஷாந்த சம்பத், சுரேஷ் ஜயதுங்க,,திலினி ஹர்ஷினி, மற்றும் பி.டி.பியதுங்க ஆகியோர் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நாட்டினர்.

நாட்டின் தேவைகேற்ப்ப நீர் ஊற்றுகள் பெருக்கவும் அதிக அளவில் மழை வீழ்ச்சி பெற்று கொள்ள மக்கள் பாவனையில் இல்லாமல் உள்ள இடங்களை இனம் கண்டு மத்திய மலைநாட்டில் இவ்வாறான மரக்கன்றுகள் நடுகை மேற்கொண்டு வருவதாக ஹட்டன் வன காரியாலய அதிகாரி தெரிவித்தார்.
