மடுகஸ்தலாவ ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர் மெதவெலகம பகுதியில் தனது நண்பரின் வீட்டுக்கு மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக தனது மெதவெலகம பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்று படுத்துக் கொண்டு இருந்த போது நேற்று இரவு 10 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்கு சென்ற போது வீட்டு மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் உடன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் பசறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இம்முறை தரம் 11ல் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
