திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ட்ரைகன் தோட்டத்தில் குழியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் விலங்கொன்றின் உறுமல் சத்தத்தையடுத்து, பொதுமகன் ஒருவர் குழியினுள் இறங்கி பார்வையிட முயற்சித்துள்ளார்.

இதன்போது குழியினுள் பதுங்கியிருந்த சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி கொட்டகலை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர் 46 வயதுடைய மாரிமுத்து புஸ்பராஜ் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் பூண்டுலோயாவைச் சேர்ந்தவர் என்றும் திருமண நிகழ்வொன்றிற்காகவே கொட்டகலை வந்துள்ளார்.

இதுவரையில் சிறுத்தை மீட்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
– கௌசல்யா

