இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் இந்திய வம்சாவளி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலங்கை வந்து 200 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் பல்வேறு அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் பலதரப்பட்ட நிகழ்வுகளை செய்து வருகின்றன.

அந்தவகையில் Australia aid அமைப்பு மற்றும் மகளிர் ஆய்வு நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மலையகம் 200 நிகழ்வானது வியாழக்கிழமை (25) பிற்பகல் 2.00 மணியளவில் பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் இருக்கும் மலையக கலைஞர்கள் சிலரை திரட்டி அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிகள் வழங்கி மூன்றாவது நாளில் அவர்கள் அனைவரினதும் தனித்துவமான படைப்புகளையும் திறமைகளையும் மேடையேற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் மலையகம் சார்ந்த கவிதைகளை, நாடகம், நடனம், பாடல்கள், சித்திரம், குறும்படம் என பல்வேறு கலையம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டதோடு டாக்டர் பொன்னி அவர்களின் “கருப்பி” எனும் ஓரங்க நாடகம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. மேலும் Australia aid மற்றும் மகளிர் ஆய்வு நிலையம் நடாத்திய நிகழ்வு மலையகம் 200 எனும் தொனிப்பொருளை அடுத்தக்கட்ம நகர்விற்கு கொண்டு சென்றிருந்ததாக வருகை தந்த கலைஞர் தெரிவித்தனர்.
– ராசையா கவிஷான் –
