மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023.
மஸ்கெலியா புனித சென் ஜோசப் தேவாலய வருடாந்த திருவிழா நேற்று 28.05.2023 அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் உள்ள ஆயர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.

காலை முதல் வெகு சிறப்பாக பூஜை ஆராதனைகள் நடைபெறுகின்றன தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேவாலயத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்ட திருவுருவச் சிலை பேருந்து தரிப்பிடம் வழியாக அஞ்சலக வீதியூடாக 7வீதிக்கு வந்து அங்கு இருந்து 2ம் வீதி வழியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை சென்று மீண்டும் 2ம் வீதி வழியாக வந்து பிரதான வீதியில் நுழைந்து ஆலய வீதியில் சென்று மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ திரு உருவம் கொண்டு செல்லப்பட்டது.
கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எவ்விதமான சிரமமும் இல்லாமல் தேவாலயத்தை சென்றனர்.

