மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023.
சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் ஏட்பாட்டில் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் Srilanka Unites நிறுவனம் இணைந்து சென். ஜோசப் கல்லூரியின் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் ஒன்றை 29ஆம் திகதியன்று காலை 9 முதல் 1.00 மணி வரை மஸ்கெலியா பொது மைதானத்தில் நடைபெற்றது.

இதன் போது தற்போது இந்நிகழ்ச்சியின் முக்கியதுவம் பற்றியும் தற்போது சமூகத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மஸ்கெலியா பிரதேச சபை செயலாளரும் சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் தலைவருமான ராஜவீரன் தனது கருத்தை கூறினார்.

அத்துடன் இந்நிகழ்வில் Srilanka unites நிறுவன அதிகாரிகள்
பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் S. உதயயகுமர் பாடசாலை ஆசிரியர்கள், பொது நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

