மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.13.06.2023.

மது பானங்கள் விலை உயர்வை தொடர்ந்து சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு சாமிமலை பகுதிகளில் உள்ள அனைத்து தோட்டங்களில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இவ்வாறு கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடத்தை தோட்ட மக்கள் மற்றும் பொலிசார் இனைந்து இல்லாமல் ஒழித்தனர்.
தற்போது மீண்டும் மீண்டும் கசிப்பு உற்பத்தி சாமிமலை கல்தோனி பகுதியில் இயங்கி வருகிறது அதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து பொலிஸ் மா அதிபர் முதல் இப் பகுதியில் உள்ள அனைத்து காவல் துறை அதிகாரிகள் கவனத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அறியத் தந்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாமிமலை கல்தோனி பகுதியில் இயங்கி வரும் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடத்தை சுற்றி வளைப்பு மேற்கொண்டு, அங்கு இயங்கி வரும் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடத்தை இல்லாதொழிப்பதுடன் அவ்வாறு உற்பத்தி செய்யும் நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.