இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு மீன்பிடி படகுகளுடன் மற்றும் 9 மீனவர்ள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இலங்கை கடற்படையின் ரோந்து படகு நடுக்கடலில் இந்திய மீன்பிடி படகு மீது மோதியது. படகின் பின் பகுதி சேதமடைந்ததுடன், படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பி கரையை அடைந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று செவ்வாய்கிழமை (23) அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை இந்திய சர்வதேச கடற்பகுதிக்கு இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு படகுகளையும் 9 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
