Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

August 31, 2026

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

August 31, 2026

யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்
இலங்கை

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

ThanaBy ThanaJanuary 7, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பாகும்- இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்- புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார்.

இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

கத்தார் நாட்டின் தூதுவராக – ஆர்.எஸ்.கான் அசாத்
ரஷ்ய தூதுவராக – திருமதி எஸ்.கே. குணசேகர
குவைத் தூதுவராக – எல்.பி.ரத்நாயக்க
எகிப்திய தூதுவராக – ஏ.எஸ்.கே.செனவிரத்ன
நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக – டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
07.01.2025

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026

    யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    August 31, 2026

    எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று மூவர் பலி; சிறுவனைத் தேடும் பணி தீவிர வீச்சு!

    August 31, 2026
    Editors Picks

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026

    யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    August 31, 2026

    எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று மூவர் பலி; சிறுவனைத் தேடும் பணி தீவிர வீச்சு!

    August 31, 2026

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026

    யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    August 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.