விறகு தேட சென்ற முதியவர் சடலமாக இன்று மீட்கப்பட்டார்.
குறித்து சம்பவம் இன்று காலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட வலதலை பிரிவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று 5.ம் திகதி காலை மறே தோட்ட வலதளை பிரிவில் உள்ள சுமார் 70 வயதுடைய ராஜகோபால் மணி என்று அழைக்கப்படும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு விற்கு சேகரிக்க சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸ் சார் தோட்ட மக்கள் இணைந்து தேடுதல் நடத்தி கிடைக்காத நிலையில் இன்று 6 ம் திகதி காலை மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது வலதளை பிவிற்க்கும் லக்சபான தோட்ட முள்ளுகாமம் மேற் பிரிவிற்க்கும் இடையே உள்ள தேயிலை செடிகள் உள்ள பகுதியில் மரணித்த நிலையில் கண்டு பிடித்து உள்ளனர்.
இறந்த நிலையில் காணப்பட்ட உடலத்தை தோட்ட மக்களும் நல்லதண்ணி பொலிசாரும் இணைந்து தோட்ட பாரவூர்தி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்து உள்ளனர்.
உடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து பார்வை இட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்த பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
