நுவரேலியாவில் 6 குடும்பங்களுக்கு நேர்ந்த அவலம்: காணி சீர்திருத்த ஆணைக்குழு மனிதாபிமானத்துடன் செயல்பட கோரிக்கை
நுவரேலியா – இராகலை சென்லியனாட்ஸ் என்கிற நடுக்கணக்கில் 6 குடும்பங்கள் 30 வருடமாக வாழ்ந்து வந்த காணிகள் வழக்கின் ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமானது என உறுதியாகி உள்ளது.
ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாம் சிறுகச் சிறுகச் உழைத்த பணத்தை கொண்டு வீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி தமது வாழ்வை கட்டியெழுப்பி இருப்பர். இந்த #மனிதாபிமான நெருக்கடியை கருத்திற் கொண்டு இலங்கை அரசுக்கு சொந்தமான காணி சீர்திருத்த ஆணைக்குழு இந்த வீடுகளை அந்த மக்களுக்கே வழங்க உடனடியாக முன்வர வேண்டும். என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் மற்றும் காணி அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று முடிவெடுக்க வேண்டும். காணிகளுக்கு சொந்தக்காரர் அரசாங்கம் என்று முடிவாகியுள்ள நிலையில் நீண்ட காலம் அந்த நிலத்தில் வாழ்ந்த ஆறு குடும்பங்களிற்கு வீடுகளை கையளிப்பதில் பாரிய தடைகள் இருக்காது என நம்புவதாகவும். அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
14/7/2026
ஹட்டன்.
