திருச்சி மாவட்டம் திருமனூர் கிராமம் நல்லுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த மறைந்த துரைசாமிப்பிள்ளை, தெய்வானை அம்மாள் ஆகியோரின் மகனும், மறைந்த ஆலம்பட்டி சப்பானியாபிள்ளை குஞ்ஞம்மாள் ஆகியோரின் மருமகனும் ராஜேஸ்வரியின் அன்புக் கணவருமான திரு பாலசுந்தரம் (ஆனந்தன் 4ம் குருக்குத்தெரு) அவர்கள் 17.09.2026 வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணி அளவில் கொழும்பில் காலமானார்.
அன்னார், Dr அபிராமி (சென்னை), அபீசன் (Latvia), மதுர்சன் (Little Spaces கொழும்பு), ஆகியோரின் அன்புத்தந்தையும், Dr ஆனந்தின் (சென்னை), அன்பு மாமனாரும், சந்திரன் (ஹப்புத்தளை) ஜெயலெட்சுமி (ஹட்டன்) சுப்புலெட்சுமி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மறைந்த வீரையாபிள்ளை (ஐஸ்வர்யாஸ் கொழும்பு), ஜெகதீசன் (பண்டாரவளை) கமலாதேவி (பண்டாரவளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வையாபுரிபிள்ளையின் ( அரவிந் டிரேடர்ஸ் பண்டாரவளை) அன்புச் சகலையும் சரஸ்வதியின் கொழுந்தனாரும், கலா, நாகரானி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும், மனோஜ், துஸ்யந்தி, ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், பவித்ராவின் அன்பு மாமாவும், அகீராவின் அன்புத் தாத்தாவும், திரு திருமதி Prof ஹரிஹரன் (சென்னை) சியாமலாதேவியின் சம்பந்தியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் கொழும்பு 15 இல 34/3, எலிஹவுஸ் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் 17 – 09 – 2026 வியாழக்கிழமை மாலை 07.00 முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20 – 09 – 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் யாவும் நடைபெற்று 11.00 மணிக்கு மாதம்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
