கந்தப்பளை அல்மா கிரேமண்ட் இளைஞர்கள் தன்னார்வமுடன் பிரதேசவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை உயர்த்துவதற்காகவும் ஆரம்பித்த எழுகை நூலகம் மூன்று ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக முன்னோக்கி செல்கிறது.

வாசிப்போடு சேர்ந்து மாணவர்களிடம் காணப்படும் தனித்திறமையை வெளிக்கொணரும் பல்வேறு முயற்சிகளை எழுகை நூலக நிர்வாகம் செய்து வருகிறது.

நூலகத்திற்கு வருகைதரும் மாணவர்கள் சிறிது நேரம் விளையாட்டுச் செயற்பாட்டை மேற்கொள்வதோடு நூலகத்தில் காணப்படும் இசைக்கருவிகளை இசைத்தும் மகிழ்கின்றனர். இந்நூலகத்தில் 4000க்கு மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்களும் இசைக்கருவிகளும் விளையாட்டுப் பொருட்களும் காணப்படுகின்றன.

இம்மூன்றாண்டுகளில் பிரதேச மாணவர்களின் கல்வியிலும் பாரிய மாற்றம் பெற்றுள்ளது இதனை வெளிவரும் தேசிய பரீட்சை பெறுபேறுகள் வெளிகாட்டுகின்றன.
மாணவர்கள் குழுவாகவும் தனியாகவும் கற்பதற்கான சூழலை எழுகை நூலக நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதே போல மலையகத்தில் பல்வேறு பிரதேசங்களில் நூலகங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழுகை நூலகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக புத்தக கண்காட்சி கலை நிகழ்ச்சி,ஓவியக் கண்காட்சி பாரம்பரிய விளையாட்டுப்போட்டி என்பவற்றை எழுகை நூலக நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து கொண்டாடடியமை குறிப்பிடத்க்கது.

