ஆர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஆர்ஜென்டினாவின் அண்டைய நாடான சிலியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்ததுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.