எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
