எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் நேற்று நீண்ட விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை பொதுவேட்பாளர் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
