ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனதேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
இந்த கால அவகாசம் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவிருந்த நிலையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
