அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் உட்டாவில் கல்லூரி நிகழ்வு ஒன்றின்போது இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க கொன்ஸ்சவேட்டிவ் கட்சியின் தீவிர ஆதரவாளரான அவர், அமெரிக்காவில் வெளிப்புற விவாதங்களை நடத்துவதில் ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு மிக்க நண்பராக அறியப்பட்டவராவார்.
இந்தநிலையில், பெறுமதிமிக்க மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார் என்று ட்ரம்ப் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
