Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

September 4, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

September 4, 2026

தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

September 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!
Breaking

தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

ThanaBy ThanaSeptember 4, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

பொகவந்தலாவ, தெரேசியா தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12:35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தெரேசியா பிரிவு தோட்டப் பகுதியில், 56 வயதுடைய வேலு புஷ்பராணி என்ற பெண் தொழிலாளி வழக்கம்போல தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது.

சிறுத்தையின் தாக்குதலில் கீழே விழுந்த அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுத்தை கடித்தபோது அவர் எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த சக பெண் தொழிலாளர்கள் உடனடியாக அந்தப் பகுதிக்கு ஓடிவந்துள்ளனர்.

தொழிலாளர்களின் கூச்சலைக் கேட்டு மிரண்டுபோன சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த பெண் சக தொழிலாளர்களால் மீட்கப்பட்டு முதலில் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மலையகப் தோட்டப் பகுதிகளில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் சிறுத்தை நடமாட்டம் மற்றும் வனவிலங்குத் தாக்குதல்கள் பொதுமக்களையும் தொழிலாளர்களையும் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

செய்தி வாசிப்பு நிறைவடைந்தது. தொடர்ந்து இணைந்திருங்கள் மலையகம் எஃப்.எம் உடன்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கைது! 

    September 4, 2026

    கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

    September 3, 2026
    Editors Picks

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

    September 4, 2026

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கைது! 

    September 4, 2026

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

    September 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.