தலவாக்கலை நகரில் இருந்து கதிர்காமம் வரை நடைபயணமாக செல்வதற்கு பக்தர்கள் குழுவொன்று நேற்று (29) பாத யாத்திரையை ஆரம்பித்தது .
இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பல்வேறு வயதுடைய சுமார் 60 பேர் கொண்ட இந்தக் குழு கதிர்காமம் ஆலயம் மற்றும் ஏனைய வணக்கஸ்தலங்கள் விகாரையில் சமய நிகழ்வுகளிலும் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
தலவாக்கலை ஆலயம் மற்றும் விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் நடைபயணத்தை ஆரம்பித்த இந்த பக்தர்கள் குழு, லிந்துலை, நானுயோயா, நுவரெலியா, கப்பிட்டிபொல, வெலிமடை, பண்டாரவளை, எல்ல வெல்லவாய ஆகிய நகரங்களின் ஊடாகச் சென்று கதிர்காமத்தை சென்றடையும்.
மஸ்கெலியா நிருபர்