Author: Thana
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரிலிருந்து வெளியேறிய பிரேசில் – வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நோர்வே
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரிலிருந்து வெளியேறிய பிரேசில் – வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நோர்வே உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி முதன்முறையாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் பிரேசில் போன்ற ஒரு முன்னணி அணி இவ்வளவு சீக்கிரமாக வெளியேறியுள்ளது அதன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட மோதலில் 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியளவில் கைதிகளின் இரு வேறு குழுக்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. மோதலில் காயமடைந்த 20 கைதிகளும் உடனடியாக மீட்கப்பட்டு நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிரடிப்படை குவிப்பு மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் பெரும் பதற்ற நிலை உருவானது. இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்துடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கைதிகளுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: தாயகம் திரும்பிய இலங்கை, களுத்துறை பெண் பரிதாப பலி …….. ………………………………… சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தில், இலங்கையின் களுத்துறை மாவட்டம், கீக்கியன கந்தையைச் சேர்ந்த, தாயகம் திரும்பிய ராசமாணிக்கம் (என்கிற ராசம், வயது 65) என்ற பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கீக்கியன கந்தையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்லையா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரி ஆவார். தமிழகத்தின் சில பகுதிகளில் வசித்து வரும் தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கை, சொல்லொணாத் துயரங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நம் மக்கள், அடிக்கடி இத்தகைய விபத்துகளில் சிக்கித் தங்கள் உயிரை இழக்கும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது. தகவல் மற்றும் புகைப்படம் கீக்கியனகந்தையை பிறப்பிடமாகவும் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட டார்வின்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (04) பிற்பகல் முதல் ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீதியின் குடாகம பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன், அந்த வீதியில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானத்துடன், மெதுவாக வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோருகின்றனர்.
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், கீரிமலை – நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஜூலை 4) குறித்த ஆலயத்தில் வெள்ளிப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, அது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் உத்தியோகப்பூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டையடுத்து, காங்கேசன்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முடுக்கிவிட்டனர். தீவிர விசாரணைகளின் அடிப்படையில், இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் திருடப்பட்ட வெள்ளிப் பொருட்களை மீற்பதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் பொலிஸார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் (Re-scrutiny Results) தற்போது உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது திருத்தப்பட்ட புதிய பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பின்வரும் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களின் ஊடாகப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.doenets.lk www.results.exams.gov.lk விசாரணைகளுக்கான அவசர உதவி எண்கள் இந்த மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள், விசாரணைகள் அல்லது சிக்கல்கள் காணப்படின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையை உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன: உடனடி அவசர அழைப்பு இலக்கம்: 1911 (Hotline) நேரடித் தொலைபேசி எண்கள்: 011 27 84 208 011 27 84 537 011 27 85 922 மீள் திருத்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்…
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. விண்ணப்பிக்கும் காலம்: ஜூலை 3ஆம் திகதி முதல் ஜூலை 23ஆம் திகதி நள்ளிரவு வரை மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முறை: இணையவழியூடாக (Online) மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். பாடசாலை விண்ணப்பதாரர்கள்: தங்களது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (Password) ஏற்கனவே அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள்: உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக தாமாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை (NIC) கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ளலாம். கவனத்திற்கு: நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு (ஜூலை 23) பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.…
சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..
சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு.. சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிட வளாகம், நாளை (04) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜனகி ராஜரத்ன உள்ளிட்ட அரச மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடத் திட்டம், சுமார் 70.46 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 50 மில்லியன் அமெரிக்க டொலர் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் சலுகைக் கடனாகவும், மீதித் தொகை இலங்கை அரசின் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடத்தில், முதல் கட்டமாக…
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ கொள்கலனின் விலை 1,280 ரூபா குறைக்கப்பட்டு, புதிய விலை 4,965 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. 5 கிலோ கொள்கலனின் விலை 512 ரூபா குறைக்கப்பட்டு, புதிய விலை 1,988 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட விருந்தாக, 2026 லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் தொடக்க விழா கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் அரங்கேறவுள்ளது. இத்தொடரின் உரிமத்தைப் பெற்றுள்ள ஐபிஜி நிறுவனம், இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 500 ட்ரோன்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான வான்வெளி ஒளிக்காட்சியைத் (Drone Show) தொடக்க விழாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில், போட்டி ஒன்றின் தொடக்க விழாவிற்காக பிரம்மாண்டமான நேரடிப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இம்முறை எல்பிஎல் தொடருக்கான நுழைவுச் சீட்டுகளை ஜூலை முதலாம் திகதி முதல் BookMyShow இணையதளம் அல்லது செயலி ஊடாகக் கொள்வனவு செய்ய முடியும். விறுவிறுப்பான டி20 கிரிக்கெட் போட்டியுடன், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இணைந்து, சர்வதேச தரத்திலான ஒரு விளையாட்டு திருவிழாவாக இந்தத் தொடக்க விழா அமையவுள்ளது.…