Author: Thana
பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்! இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல மூத்த சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான நாவலிலுள்ள அவரது இல்லத்தில் காலமானபோது அவருக்கு வயது 82 ஆகும். இலங்கை இசை உலகில் தனது தனித்துவமான குரல்வளத்தினாலும் சமூகச் யதார்த்தங்களை வெளிப்படுத்தும் பாடல்களினாலும் பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் நாளாந்த வருகைக் கொடுப்பனவை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக் கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்கி வருகிறது. எனினும், பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த, தற்காலிக மற்றும் 60 வயதைக் கடந்த தொழிலாளர்கள் பலரும் இந்தத் தொகையில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாிகத் தரவுகளின்படி சுமார் 73 ஆயிரத்து 500 தொழிலாளர்களே தற்போது இந்தக் கொடுப்பனவைப் பெறுகின்றனர். ஆனால், சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக இருக்கக் கூடும் எனவும், எனவே அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த நிவாரணம் கிடைக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணபதி கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவை 500 ரூபாவாக உயர்த்துவதுடன்,…
தலவாக்கலையில் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்களின் அனுமதிப் பத்திரங்கள் தற்காலிக ரத்து!
நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன சோதனையின் போது, இயக்கத்திற்குத் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக இயக்கத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பிரதான பரிசோதகர் ஜலிய பண்டார தெரிவித்துள்ளார். பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள், லாரிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ப மொத்தம் 40 வாகனங்கள், சாலைக்குத் தகுதியானவையா என்பதை உறுதி செய்வதற்காக அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டன. நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து இந்தப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். சோதனை செய்யப்பட்ட வாகனங்களில், பல்வேறு பழுதுகள் காணப்பட்ட 28 வாகனங்கள் இயக்கப்படுவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டதுடன், அவைகளின் வருமான உரிமங்களும் (Revenue Licences) அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட வாகனங்களில் 4 தனியார் பேருந்துகளும், 15 முச்சக்கர வண்டிகளும் அடங்கும். கண்டறியப்பட்ட பழுதுகள் திருத்தப்பட்டு, மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரை இந்த வாகனங்கள்…
பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் சுமார் 19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 18 கிலோகிராம் 672 கிராம் ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!
பதுளை மாவட்டம், பசறை பிரதேசத்திற்கு உட்பட்ட வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் எண்ணத்தை தோட்ட நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தொழிலாளர் தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பிரதான இணை அமைப்பாளரும், பசறை பிரதேச சபை உறுப்பினருமான தங்கையா பிரதீபன் பிரபு வலியிறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ”மக்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டியது தோட்ட நிர்வாகத்தின் கடமையாகும். அதை விடுத்து, தோட்டத்தைத் தனியாருக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன், பதுளை மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களிலும் முகாமையாளர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்து, மக்களைப் பெரும் சுமைக்கு ஆளாக்கியுள்ளன. பேருக்கு 24 கிலோ கொழுந்து அல்லது பால் கேட்கும் இவர்கள், தொழிற்சாலைகளையும் மூடிக்கொண்டு வருகின்றனர். இந்த நிலைமைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தொழிற்சங்க சந்தா சேர்ப்பதில் மாத்திரம் அக்கறை செலுத்தும் ஆளுத்தரப்புத் தொழிற்சங்கங்கள், இன்று மக்களுக்கு ஏற்படும்…
நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு
குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘தலைக்கு நிழல்’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பார்ம்ஸ்டன்–ரத்னகிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் எஸ். ஏ. டி. ஏ. டி. பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கும் நிகழ்வு, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மத்திய மாகாணப் பணிப்பாளர் திருமதி உபேக்ஷா விஜேசிங்க தலைமையில் நடைபெற்றது. 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், அமைச்சினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, கிராம அபிவிருத்தி பிரதேச அதிகார சபையின் வழிகாட்டுதலில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி மற்றும் அவர்களின் உழைப்புப் பங்களிப்பின் மூலம் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட…
கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிச் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாகப் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள், பேருந்து சேவை இல்லாத காரணத்தினால் அங்கேயே உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன், மஸ்கெலியா உள்ளிட்ட மலைநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பல மணி நேரமாகக் காத்திருப்பதால், குறித்தும் பெண்கள், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்போர் கடும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துறைசார் அமைச்சரும் உடனடியாகக் கவனம் செலுத்தி, கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிய இரவு நேரப் பேருந்து சேவைகளை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளனர். அஸ்கர்
வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வாடகை வாகன ஓட்டுநர்கள் அல்லது வாகன சேவைகளில் உதவி புரிபவர்கள் சம்பந்தப்பட்ட சில குற்றச் சம்பவங்கள் குறித்துத் தகவல்கள் கிடைத்துள்ளதை அடுத்து, காவல் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் இந்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, பயணிகள் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்: பதிவுச் சரிபார்ப்பு: பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன், வாகனம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், வாகனத்தின் பதிவு எண், ரகம் மற்றும் ஓட்டுநரின் பெயரையும் சரிபார்க்க வேண்டும். நேரலை இருப்பிடப் பகிர்வு: குறிப்பாக இரவில் பயணிப்போர், தங்களது தொலைபேசி அல்லது கூகுள் வரைபடம் (Google Map) மூலம் தங்களது நேரலை இருப்பிடத்தைக் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இலக்கை அடையும் வரை அவர்கள் உங்களைக்…
கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்! கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பையா மகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் மூலம் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்ட முன்மொழிவினூடாக, மாகாண சபை நிதியத்திலிருந்து ரூ. 15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர் சுப்பையா மகேந்திரன் மற்றும் அப்பகுதி தோட்டப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன! உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான மிகச் சிறந்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களின் எதிர்காலத்தைப் பொன்னாவதாக மாற்றிக்கொள்ளுங்கள்! விண்ணப்பிக்கக் கடைசித் திகதி: 2026 செப்டம்பர் 27 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தகுதிகள் * உயர்தரப் பரீட்சை: 2023, 2024 அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் குறைந்தது 3 பாடங்களில் S சித்தி பெற்றிருத்தல் வேண்டும். உயர்தர அல்லது சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது S சித்தி பெற்றிருத்தல் அவசியமாகும். * பொதுச் பரீட்சை: Common General Test (பொதுச் சாதாரண பரிட்சை) இல் குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். * வயது எல்லை: 2026.09.27 அன்று 25 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இலங்கையின் 16 முன்னணிப் பட்டம் வழங்கும்…