Author: Thana
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. வட, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேவேளை காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்று மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். வாகரையிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக…
இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி விக்ரமரத்ன (சந்தன தீபால் விக்ரமரத்ன) காலமானார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கியால் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தலவத்துகொட, தலகேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 34 வருடங்களுக்கும் மேலான பொலிஸ் சேவை கடந்த 1986 ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக (ASP) தனது பொலிஸ் சேவையை ஆரம்பித்த சி.டி.விக்ரமரத்ன, சுமார் 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவராவார். பதில் கடமையிலிருந்து 35 ஆவது பொலிஸ் மா அதிபராக உயர்வு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற…
பசறை கல்வி வலயத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் பொறுப்பேற்பு பசறை கல்வி வலயக் கல்வி பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக ஆர். எம். நவாஸ் இன்று (16) உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் இணைந்து புதிய வலயக் கல்விப் பணிப்பாளரை அன்புடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வமதப் பிரார்த்தனைகளின் பின்னர், கடமைப் பொறுப்பேற்பு நிகழ்வு ச இடம்பெற்றது. இந்தப் பொறுப்பேற்பு நிகழ்வை முன்னிட்டு, கல்வி வட்டாரங்களினதும் சக பணியாளர்களினதும் சார்பில் அவருக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. — நடராஜா மலர்வேந்தன்
நாட்டின் தற்போதைய காலநிலை மாற்றங்கள் மற்றும் நீர் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நீர்வழங்கல் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் நீர் ஆதாரங்களின் மட்டத்தைப் பேணுவதற்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் நுகர்வோரின் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது அன்றாட வீட்டுத் தேவைகளான சமையல் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு மாத்திரம் நீரை முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாறாக, வாகனங்களைக் கழுவுவதற்கும், வீட்டுத் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கும் மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற தேவைகளுக்கும் குழாய் நீரைப் பெருமளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் நீரை வீணடிப்பதைக் குறைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்தும் பட்சத்தில், உலர் காலநிலை நிலவும் பகுதிகளிலோ அல்லது நீர் நுகர்வு அதிகமாக உள்ள…
நள்ளிரவில் பாரிய இரத்தினக்கல் அகழ்வு: தேயிலைச் செடிகளை அழித்து அட்டகாசம்; போர்ட்ரீயிலும் 200 பேர் முகாமிட்டுள்ளதால் சுற்றாடல் ஆபத்து! ஹட்டன் விசேட நிருபர் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள நோர்வூட் NC தேயிலைத் தோட்டப் பிரிவிலும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகிக்கும் கெசல்கமு ஓயாவிற்கு அருகிலுள்ள போர்ட்ரீ (Portree) தோட்டத்திலும் இரவு நேரங்களில் மிகப்பாரிய அளவில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் பாரிய சுற்றாடல் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் (15) நள்ளிரவு, இந்தச் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வுக் குழுவினர் NC தேயிலைத் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு பயிரிடப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தேயிலைச் செடிகளை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, அவற்றின் அடியில் இருந்த இரத்தினக்கல் படிமங்களைத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். இக்கும்பலினால் விளைநிலங்களில் ஆங்காங்கே பெரிய அளவிலான…
இலங்கையில் 5 இல் ஒருவருக்கு வறுமை ஆபத்து; சத்தான உணவின்றி தவிக்கும் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள்: உலக வங்கி எச்சரிக்கை!
இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதிய சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஜியோர்கே சர்கீசியன் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் சவால்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஸ்திரத்தன்மையும் மீட்சியும் ஒன்றல்ல! பொருளாதார ஸ்திரத்தன்மையும், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதலும் ஒன்றல்ல என்பதைப் பல இலங்கை மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் உணர்ந்து வருவதாக உலக வங்கியின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் வருமான மட்டம் ஓரளவுக்கு மீண்டு வந்தாலும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பலரின் சம்பளம் இன்னும் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் தொழில் சந்தை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையும், குறிப்பாக இதனால் பெண்கள் அதிகளவிலான…
கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் பெண் ஒருவரும், அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக சந்தைப் பெறுமதியைக் கொண்ட ‘ஐஸ்’ (Methamphetamine) போதைப்பொருள் தொகையுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வி புகட்டும் உன்னதப் பணியில் உள்ள ஒருவரே இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளமை கொழும்புப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த நம்பகமான இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், மாதம்பிட்டிய பகுதியில் விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இந்தத் தம்பதியினர் பொலிஸாரால் மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின் சோதனையின் போது தம்பதியினர் இருவரிடமிருந்தும் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபரான ஆடவரிடமிருந்து 1 கிலோ 6 கிராம் எடையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருளும், அவரது மனைவியான ஆசிரியைடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மொத்தப் போதைப்பொருளின் சர்வதேச…
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு: அர்ச்சுனா எம்.பி பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய கடுமையான விமர்சனங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்புடன் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளனர். இதனால் எவ்வித முடிவுகளுமின்றி கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை இந்த முக்கிய அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பல உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு முக்கிய துறைகள்…
பிபிலை கல்வி வலயத்திற்கு புதிய கல்வி பணிப்பாளர் பொறுப்பேற்பு பிபிலை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளராக திருமதி எம்.ஏ. ஸரீனா பேகம் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அலுவலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து புதிய கல்வி பணிப்பாளரை உளமாற வரவேற்றனர். திருமதி ஸரீனா பேகம் முன்னதாக பிபிலை மற்றும் பசறை கல்வி வலயங்களில் கல்வி பணிப்பாளராகவும், மேலும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் பிரதி கல்வி பணிப்பாளராகவும் சிறப்பாக சேவையாற்றிய அனுபவமிக்க கல்வி நிர்வாகியாக விளங்குகிறார். துணிச்சலுடனும் திறமையுடனும் செயலாற்றும் பெண் தலைமைத்துவத்தின் முன்னுதாரணமாக இவர் பரவலாக பாராட்டப்படுகிறார். கல்வித்துறையில் இவரது நேர்த்தியான மற்றும் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு NDB வங்கி மற்றும் NewsFirst இணைந்து வழங்கிய “ஸ்ரீலங்கா வனிதாபிமான விருது”வில் கல்வித்துறையில் சிறந்து விளங்கிய முதன்மை மகளிருக்கான விருதை…
தோட்டப் பகுதிகளுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்
தோட்டப் பகுதிகளுக்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று (15) இடம்பெற்ற சபையின் மாதாந்த அமர்வில் விஷேட உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார். தலைவர் உட்பட 14 உறுப்பினர்கள் கலந்து கொண்ட அமர்வில் அவர் மேலும் பேசுகையில், கொரோனாவை அடையாளம் கண்டது போல, டெங்கு நோயை இலகுவாக கண்டு கொள்ள முடியாதுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சலில் படுக்கும் போதுதான் தெரிய வருகின்றது. இலங்கையில் கொழும்பில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். மத்திய மாகாணத்தில் கண்டியிலும் பலர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள். நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானவர்கள் டெங்கு நோயில் பீடிக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்மபதைத் தாண்டியுள்ளது. எனவே, நாமும் டெங்கு நோய்த் தொற்றிலிருந்து எம்மை காப்பாற்றிக் கொள்ள வீடுகள்,…