Author: Thana
”டிட்வா சூறாவளி நிவாரண நிதி: 70 சதவீத நிதி இன்னும் செலவிடப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம் அவசர உத்தரவு!”
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிவாரண மற்றும் புனரமைப்பு நிதியில், இதுவரை வெறும் 30 சதவீத மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 70 சதவீத நிதியை உடனடியாகப் பயனாளிகளுக்கு விநியோகிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் மூலம் நஷ்டஈட்டு வழங்குவதற்காகவும், வெள்ளம் மற்றும் நிலநச்சரிவால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் மொத்தம் 86.7 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் வெறும் 26.4 பில்லியன் ரூபாய் அதாவது சுமார் 30 சதவீதம் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் 60.3 பில்லியன் ரூபாய் அரச துணைக் கணக்குகளிலேயே தேங்கிக் கிடப்பதாகப் பொக்கிஷப் (Treasury) அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கமைய, பேரிடர் மேலாண்மைப் பிரிவின் மேலதிக செயலாளர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் திகதி விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதன்படி, எஞ்சியுள்ள…
ஓகஸ்ட் மாதத்திற்குரிய அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவை, எதிர்வரும் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின்கீழ், 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரம் ரூபாய் தொகையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நுவரெலியா வர்த்தக சங்கம் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு தொழில் முனைவுக்கு அப்பாற்பட்டு வழிகாட்டுதல், அவர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சர்வதேச சந்தைக்கு வழி நடத்துதல் மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் நுவரெலியா வர்த்தக சங்கம் நிறுவப்பட்டது. அரலியா குழு நிறுவனங்களின் தலைவர் திரு. டட்லி சிறிசேன அவர்களின் அனுசரணையில், நுவரெலியாவில் உள்ள அரலியா ரெட் ஹோட்டலில் கடந்த 8ஆம் திகதி அன்று நுவரெலியா வர்த்தக சங்கம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் நுவரெலியா வர்த்தக சங்கத்தின் அதிகாரப்பூர்வ பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி. துஷாரி தென்னக்கோன், நுவரெலியா வர்த்தக சங்கத்தின் இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். நுவரெலியா மேயர் உப்பாலி வனிகசேகர, முன்னாள் மேயர் மஹிந்த டொடம் பேகம, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் சிறு வணிகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்நிகழ்ச்சியில் நுவரெலியா வர்த்தக சங்கத்தின் தலைவர் பண்டாரா, பத்திரிகையாளர்…
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் நீர்த்தேக்கங்களுக்குக்கான நீர் வரத்தும் பலமடங்கு அதிகரித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர் ஓடைகள், பிரதான கங்கைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தற்போது பெருமளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஹட்டன் ஓயா *போடைஸ் ஓயா டயகம பகுதியில் ஆரம்பமாகும் மகாவலி கங்கை மற்றும் அதனுடன் இணையும் சிற்றாறுகளான காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, கெசல்கமு ஓயா மற்றும் மரே ஓயா காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி, மரே நீர்வீழ்ச்சி, டெவன் நீர்வீழ்ச்சி மற்றும் சென் கிளையர் நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் வழமைக்கு மாறான அளவில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள பிரதான நீர்மோட்டார் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்…
இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள வட மாகாணத்தின் மிக உயர்ந்த உத்தேச உயரடுக்கு (High-rise) குடியிருப்புத் திட்டமான Yarl Royal Palace திட்டத்தை முன்னெடுப்பதற்காக ‘டில்கோ ப்ளூ ஓஷன் ஹோல்டிங்ஸ்’ (Tilko Blue Ocean Holdings (Pvt) Ltd) நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்ட் பார்க் (Old Park) பூங்காவுக்கு எதிரே, கண்டி வீதி, இலக்கம் 107 என்ற முகவரியில் அமையவுள்ள இக்கட்டடத் திட்டம், இப்பகுதியின் அதிநவீன நகர்ப்புற வாழ்க்கை முறைக்கான புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: 6 தளங்கள்: நவீன வாகனத் தரிப்பிட வசதிக்காக (Car parking) ஒதுக்கப்பட்டுள்ளன. 13 தளங்கள்: பிரீமியம் தரத்திலான சொகுசு குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 78 குடியிருப்புகள்: அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பிரத்தியேகமான உயர்தரக் குடியிருப்புகள். முதலீடும் பொருளாதார…
வேவெஸ்ஸ மத்தியப் பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு
வேவெஸ்ஸ மத்தியப் பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்தியப் பிரிவில் சுமார் 27 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இறப்பர் காணியை தனியாருக்கு வழங்குவதற்கு பலாங்கொடை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி. மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு தோட்டத் தொழிலாளர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த காணி நீண்டகாலமாக இறப்பர் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அதனை நம்பியே பல தொழிலாளர் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சுமார் 27 ஹெக்டேர் இறப்பர் காணியை தனியார் தரப்புக்கு வழங்குவதன் மூலம் தங்களது வேலைவாய்ப்பும் எதிர்கால வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனதொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “தோட்டக் காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு முன்னர் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், குறித்த காணி தொடர்பான தீர்மானத்தை மீள்பரிசீலனை…
நுவரெலியாவில் படகு கவிழ்ந்து விபத்து – இரு சிறுவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்.. நுவரெலியா – ஆகஸ்ட் 17 நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட்ஸ்கி படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்ததில், நீரில் மூழ்கும் அபாயத்திற்குள்ளான இரு சிறுவர்களை இலங்கை கடற்படையின் விரைவு செயற்பாட்டு மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (16) கிரகரி வாவியில் இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, எதிர்பாராத விதமாக ஜெட்ஸ்கி படகு கவிழ்ந்ததில், அதில் பயணித்திருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கும் அபாயத்திற்குள்ளாகியுள்ளனர். சம்பவம் இடம்பெற்றதை கிரகரி வாவியில் உயிர்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் விரைவு செயற்பாட்டு மீட்புக் குழுவினர் உடனடியாக அவதானித்துள்ளனர். இதனையடுத்து, எந்தவித தாமதமும் இன்றி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…
நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ படகு விபத்து: 2 சிறுவர்களை விரைந்து மீட்டு உயிர்காத்த கடற்படை!
நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான இரண்டு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் விரைவு மீட்புக் பிரிவினர் உடனடி நடவடிக்கை எடுத்து சிறுவர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்திய சம்பவம் தொடர்பாக, நான்கு பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு அதிகாரிகளும் அவர்கள் கடமையாற்றும் வங்கி வளாகங்களுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் வங்கி முகாமையாளர்கள் இவ்வாறான பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரியால், கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு வாராந்தம் லஞ்சப் பணம் வழங்கப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணம் கைமாறியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர் ஒருவருக்கு, ஒரே சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்…
ஆன்லைன் மூலம் கட்டுமானப் பொருட்கள் விற்பனை: புதிய பண மோசடி குறித்து பொலிஸார் அவசர எச்சரிக்கை!
இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபடும் அமைப்பொன்று இயங்கி வருவதாகப் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்பெஸ்டாஸ் சீட்டுகள், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைச் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி விளம்பரங்களை வெளியிடுவதே இந்த மோசடிக் கும்பலின் முதற்கட்ட நடவடிக்கையாகும். வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்தவுடன், மோசடிக்காரர்கள் அந்த வாடிக்கையாளர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஹார்ட்வேர் கடையைத் தொடர்புகொண்டு, குறிப்பிட்ட முகவரிக்கு பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்கின்றனர். பொருட்கள் முகவரியைச் சென்றடைந்ததும், மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக வைப்புச் செய்ய வைக்கின்றனர். பொருட்களைக் கொண்டு வந்த சாரதியோ அல்லது கடை உரிமையாளரோ அதற்கான பணத்தைக் கேட்கும் போதே, தாம் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்கின்றனர். இதனால் பணத்தையும் இழந்து, பொருட்களையும் பெற முடியாத நிலை…