Author: Thana
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையின் முதலாவது அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும், சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு 91 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதம் மட்டுமே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (01) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ”இன்று…
ஊவா மாகாணம் – பதுளை மாவட்டம் – பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆறுமுகங் கொண்டு ஆறுதலைத் தரும் முருகன் ஆக்கமுடன் வாழ நல்ல கருணையை அளித்திடுவான் கேட்கும் நலன் தந்து வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் மலை சூழ்ந்த நன்னிலத்தில் வந்துறையும் திருமுருகன் மானமுடன் நாம் வாழ வழியமைத்துத் தந்திடுவான் முன்னேறும் வழிகாட்டி நம் வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் வள்ளி தெய்வானையரை அருகு கொண்டு காட்சிதரும் வேல்முருகன் வழுவில்லா நல்வாழ்வைத் தவறாமல் எமக்காக்கிடுவான் வெற்றிகளைத் தந்து வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் தமிழ்த் தெய்வம் என்ற புகழ் கொண்ட வனாம் எங்கள் மால்மருகன் தழும்பாத மனநிலையைத் தப்பாமல் தந்திடுவான் திறமைகளைத் தந்தெங்கள் வாழ்வை உயர்த்திடுவான் பண்டாரவளை கோயில் கொண்ட சிவனார் இளமகனார் சிவசுப்பிர சுவாமி யென்ற பெயர் பூண்ட எங்கள் குகன் சீர்மை…
மலையக முன்னேற்ற கழகத்தினால் அப்பர்கிறன்லியில் பாடசாலை திறந்து வைப்பு. அக்கரப்பத்தனை – அப்பர்கிறன்லி தமிழ் வித்தியாலய பாடசாலை மிக நீண்ட காலமாக கொழுந்து நிறுக்கும் மடுவத்தில் இயங்கிவந்த நிலையில் இதுகுறித்து கவனம் செலுத்திய மலையக முன்னேற்ற கழகம் அதனை பாடசாலை கட்டிடமாக மாற்றியமைத்து பாடசாலை நிராவாகத்தினரிடம் கையளிக்கும் திறப்பு விழா நேற்றைய தினம் (29) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோட்ட கல்வி பணிப்பாளர் கிருபாகரன், PSI அதிகாரி உதயகுமார், பிரதேச இணைப்பாளர் ஸ்டீபன், மலையக முன்னேற்ற கழக தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர், கழக உறவுகள் கலந்து கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் அதிதிகளை வரவேற்கும் நிகழ்வும் கொடியேற்றும் வைபவமும் பாடசாலை கட்டிடத்திற்க்கான கல்வெட்டு திரை நீக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. மேலும் விஷேட விருந்தினர்களால் பாடசாலை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றிருந்தது.…
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது “மின் வழிக்கற்கை” நிலையங்கள் (Digital Education Centre) எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. மாத்தளை மாவட்ட தமிழ் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மின்னியல் தொழிநுட்பம் ஊடாக வலுப்படுத்த இத்திட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கான நன்கொடைகள் அவுஸ்திரேலியாவின் ஐயமிட்டுன் அமைப்பின் ஊடாகவும், ஒன்றியத்தின் ஊடாகவும் வழங்கப்படுகின்றது. நிகழ்வில் நிகழ்நிலையில் கலந்து கொள்ள முடியும்.
நானுஓயா -டெஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் 77 வீதமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர். இந்த பெறுபேறு 27 வருட பாடசாலை கால வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு மாணவர்கள் 77 % சித்தியெய்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த வருடம் 66% மாணவர்கள் உயர்தரத்துக்கு தேர்வாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.பாடசாலை அதிபர் எஸ் .சிவபாலசுந்தரம் மாணவர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் கல்வியங்காடு – அருள்மிகு சந்திரசேகரப் பிள்ளையார் திருக்கோயில் அங்காடி அருகு கொண்டு வீற்றிருக்கும் பிள்ளையார் அச்சம் தவிர்த் தெமக்கு ஆறுதலைத் தந்தருள்வார் நம்பியவர் அடியை நாமும் தொழுதுவிட்டால் திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார் துணிவைத் தந்தெமக்கு ஆற்றல் தரும் பிள்ளையார் தூய மனத்தினைராய் வாழவழி தந்தருள்வார் நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால் திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார் வளங் கொழிக்கும் தமிழர் மண்ணில் வந்தமர்ந்த பிள்ளையார் வருந் துன்பம் தடுத்தெமக்கு நிம்மதியைத் தந்திடுவார் நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால் திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார் எங்கும் எதிலும் எழுந்தருளும் பிள்ளையார் ஏக்கம் தடுத்தெமக்கு நம்பிக்கையைத் தந்தருள்வார் நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால் திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார் நம்பிக்கை தந்தெம்மை வாழ வைக்கும் பிள்ளையார் நிரந்தரமாய் நன்மைகளை நமக்கென்றும் தந்தருள்வார் நம்பியவர் அடியை நாமும் தொழுது…
நு/கிளாஸ்கோ தழிழ் வித்தியாலயம் அக்கரப்பத்தனை பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக அதிகப்படியான மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் தோற்றுவதற்கு தேர்ச்சி யடைந்துள்ளார்கள். அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 17 மாணவர்கள் உயர்தரத்திற்கு செல்ல தகுதியுடையவர்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாட அடிப்படையில் பாடசாலையின் பெறுபேற்று சதவீதம் பின்வருமாறு. 01.சமயம் 94% 02.தமிழ் 100% 03.கணிதம் 89% 04.வரலாறு 100% 05.விஞ்ஞானம் 84% 06.ஆங்கிலம் 84% 07.சித்திரம் 100% 08.விவசாயம் 77% 09.சுகாதாரமும் உடற்கல்வியும் 100% 10.RC 100% 11.இலக்கிய நயம் 58% 12.குடியியல் 95% மேலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் 89.4% பாடசாலை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்பியன் ஆனது HCC அணி.
ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலையின் 2017ம் ஆண்டு சாதாரண தர மாணவர்களின் ஏற்பாட்டில் Back benchers trophy கிரிக்கெட் சுற்றுப்போட்டி அண்மையில் இடம்பெற்றது. 20க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்ற தொடரில் HCC அணி சம்பியன் ஆனது. Runners up ஆக Team nabEel தெரிவானதுடன் சிறந்த பந்துவீச்சாளராக ஹஸ்லிங் ஔல்ஸ் அணியின் ஆதிப் தேர்வானார். சிறந்த வீரராக HCCன் இர்ஹாம் தெரிவு செய்யப்பட்டதோடு, இறுதி போட்டியின் நாயகனாக HCCன் அர்ஷாத் தேர்வானார். சிறந்த துடுப்பாட்ட வீரராக Team nabilன் Nabeelம் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணம் – மன்னார் மாவட்டம் – மன்னார் அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் கலைகளுக்கு அரசியாய் வீற்றிருக்கும் தாயே அறிவுக் கண் திறக்க பார்த்து நீ அருளிடம்மா பல்கலை அறிவு பெற்றுயர என்றும் அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே மன்னார் திருமண்ணில் மாண்புடனிருந் தருளும் தாயே மனக்கவலை அண்டாமல் பார்த்து நீ அருளிடம்மா மனமகிழ்வு பெற்று நாம் வாழ என்றும் அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே தூயவள வாழ்வளிக்கும் திருமகளே தாயே துயர் அண்டா நிலை தந்து பார்த்து நீ அருளிடம்மா துணிவுடனே நாம் வாழ என்றும் அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே அன்பு கொண்டு ஆதரித்து அரவணைக்கும் தாயே அச்சமின்றி நிம்மதியை தந்து பார்த்து நீ அருளிடம்மா அல்லல் நெருங்கா நிலையில் நாம் வாழ என்றும் அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே கௌரியம்மை இருந்தருளும் இடம் அமர்ந்த தாயே கௌரவமாய் வாழும்நிலை தந்து பார்த்து அருளிடம்மா கொடுமைகள் விலக்கி நாம்…
மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் அட்டன் – டிக்கோயா புளியாவத்தை நகர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் மலை சூழ்ந்த நன்னகரில் கோயில் கொண்ட விநாயகரே வரும் காலம் எமதென்ற நம்பிக்கை தந்திடைய்யா வெற்றிமேல் வெற்றியை நாமென்றும் பெற்றுவிட கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே புளியாவத்தை நகரினிலே கோயில் கொண்ட விநாயகரே புத்துணர்வு தந்தெமக்கு எழுச்சியைத் தந்திடைய்யா நம்பிக்கை கொண்டு நாமென்றும் உயர்ந்துவிட கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே மத்திய மாகாணத்தில் கோயில் கொண்ட விநாயகரே மாண்புடன் வாழ எமக்கு வழியைநீ தந்திடைய்யா மதிபிறழா மனவுறுதி பெற்றுவிட கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே தேயிலைத் தோட்டங்கள் சூழ கோயில் கொண்ட விநாயகரே தேக்கமின்றி முன்னேறும் வழியைத் தந்திடைய்யா துயரமெம்மை அண்டாத நிலையை நாம் பெற்றுவிட கருணை செய்து காத்தருள்வாய் எங்கள் செல்வ விநாயகரே தமிழ் மொழியின் ஒலி கேட்குமிடம் கோயில் கொண்ட…