Author: Thana

சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் ,இலங்கை கிரிக்கெட் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை, 5 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்தது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று (24) நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 43.1 ஓவர் முடிவில் 160 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து 161 ஓட்டங்கள் என்ற…

Read More

இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து, பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது. மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் படையினரும் கலந்துகொண்டனர்

Read More

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பொலன்னறுவை கந்தகாடு விவசாயப் பண்ணையை எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. கந்தகாடு பண்ணையின் 1,215 ஹெக்டேயரை இராணுவத்தினருக்கும், மேலும் 500 ஏக்கரை புனர்வாழ்வு திணைக்களத்திற்கும் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும், இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையைக் குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின்படி கந்தகாடு விவசாயப் பண்ணையில் உள்ள 11,000 ஏக்கர் நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Read More

குரங்கு அம்மை நோயை , உலக சுகாதார ஸ்தாபனம் அவசர நிலையாக அறிவித்துள்ளது. 58 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. 3 ஆயிரத்து 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனோம் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை நோய் சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கும் அது பரவக்கூடும். இதனால் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

Read More

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹொரண, அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

Read More

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று(24) நடைபெறவுள்ளது. ஏற்கனவே தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து விட்ட ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது. அவுஸ்திரேலிய துடுப்பட்ட வீரர் டிராவிஸ் ஹெட் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Read More

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா அவர்கள் இன்று சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன முன்னிலையில் (22) பதவிச்சத்தியம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் பதவிச்சத்தியம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ இராஜினாமா செய்த பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தம்மிக பெரோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். தம்மிக பெரேரா பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிச்சத்தியம் செய்து கொள்வதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு (21) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டது. 1967 டிசம்பர் 28ஆம் திகதி களுத்துறை கட்டுக்குறுத்தை பிரதேசத்தில் பிறந்த தம்மிக்க பெரேரா, ஹொரண தக்ஸிலா வித்தியாலையத்தின் பழைய மாணவராவார். அத்துடன் இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாதாரியாவார். எச்.ஈ. ஜனகாந்த சில்வா, பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர்…

Read More

ஆப்கானிஸ்தானின் தலீபான் ஆட்சியாளர்கள், சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று பதிவான பூமியதிர்ச்சியினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். ஆப்கானிஸ்தான் 20 வருடங்களின் பின் முகங்கொடுத்த மோசமான அனர்த்தமாக இது பதிவாகியுள்ளது. பூமியதிர்ச்சியினால் சில கிராமங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்துள்ளனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையும் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வரவேண்டுமென தலீபான் ஆட்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை தலீபான் அமைப்பினரின் ஆட்சியை சர்வதேச நாடுகள் பல நிராகரித்துள்ளன. இவ்வாறான சூழலில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்குமா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. எனினும் சில நாடுகள் மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாவை நிதியுதவியாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியிருந்தது. அதில் 50 வீதமான தொகையே வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு சில நிபந்தனைகளுடன் எஞ்சிய நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முதற்கட்டமாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபா வழங்கப்படவுள்ளது. இதேவேளை எரிபொருளுக்கான வரியை 5 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Read More

நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ‘PMB அரிசி’யை (PMB Rice) அடுத்த வாரம் கொழும்பு மக்களுக்கு விற்பனை செய்ய ,விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அரிசி 5 மற்றும் 10 கிலோவாக பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் பல இடங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் 200,000 அரிசி பொதிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Read More